யத1: ப்1ரவ்ருத்1தி1ர்பூ4தா1னாம் யேன ஸர்வமித3ம் த11ம் |

ஸ்வக1ர்மணா த1மப்4யர்ச்1ய ஸித்3தி4ம் வின்த3தி1 மானவ: ||46||

யதஹ--—யாரிடமிருந்து; ப்ரவ்ரித்தஹி----படைக்கப்பட்டிருக்கின்றன; பூதானம்--—எல்லா உயிரினங்கள்-; யேன--—யாரால்; ஸர்வம்--—அனைத்தும்; இதம்—--இந்த; ததம்----வியாபித்திருக்கிறதோ; ஸ்வ-கர்மணா--—ஒருவருடைய இயற்கையான வேலையின் மூலம்; தம்--—அவரை; அப்யர்ச்ய—--வழிபாட்டினால்; ஸித்திம்---முழுமையை;விந்ததி--—அடைகிறார்; மானவஹ----ஒரு நபர்

అనువాదం

BG 18.46: ஒருவரின் இயற்கையான தொழிலைச் செய்வதன் மூலம், எல்லா உயிரினங்களும் யாரிடமிருந்து தோன்றியதோ, யாரால் முழுப் பிரபஞ்சமும் வியாபித்திருக்கிறதோ, அந்த படைப்பாளியை ஒருவர் வணங்குகிறார். அத்தகைய வேலையின் மூலம், ஒரு நபர் முழுமையை அடைகிறார்.

వ్యాఖ్యానం

இறைவனின் படைப்பில் எந்த ஆத்மாவும் மிகையாகாது. அவரது தெய்வீகத் திட்டம் அனைத்து உயிரினங்களையும் படிப்படியாக முழுமைப்படுத்துவதாகும். ராட்டினத்தின் சக்கரத்தில் உள்ள சிறிய பற்கள் போல நாம் அனைவரும் அவரது திட்டத்தில் பொருந்துகிறோம். மேலும் நமக்கு கொடுத்திருக்கிற திறமையை விட அதிகமாக நம்மிடம் அவர் எதிர்பார்ப்பதில்லை. எனவே, நமது இயல்பு மற்றும் வாழ்க்கையில் உள்ள நிலைக்கு ஏற்ப நமது ஸ்வ-தர்மத்தை நாம் எளிமையாகச் செய்ய முடிந்தால், நம்மை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான அவரது தெய்வீகத் திட்டத்தில் பங்கேற்போம். பக்தி உணர்வுடன் செய்யும்போது, ​​​​நமது வேலையே ஒரு வழிபாடாக மாறும்.

எந்தக் கடமையும் அசிங்கமானதல்ல அல்லது தூய்மையற்றது அல்ல, அதை நாம் செய்யும் உணர்வுதான் அதன் மதிப்பைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்கும் சக்திவாய்ந்த கதை, மகாபாரதத்தின் வன பர்வத்தில் மார்க்கண்டேய முனிவரால் யுதிஷ்டிரருக்குச் சொல்லப்பட்டது:

ஒரு இளம் ஸன்யாஸி காட்டிற்குச் சென்று அங்கு தவமிருந்து நீண்ட காலம் துறவு செய்ததாகக் கதை கூறுகிறது. சில வருடங்கள் சென்றன, ஒரு நாள் மேலே மரத்திலிருந்து காகத்தின் எச்சம் அவர் மீது விழுந்தது. அவர் கோபமாகப் பறவையைப் பார்த்தார், அது தரையில் விழுந்தது. சன்யாசிரியர் தனது துறவறத்தின் விளைவாக மாய சக்திகளை வளர்த்துக் கொண்ட அவர் தற்பெருமையால் நிறைந்தார்.

சிறிது நேரம் கழித்து, அவர் பிச்சை எடுக்க ஒரு வீட்டிற்குச் சென்றார். அந்த வீட்டுப் இல்லத்தரசி வீட்டு வாசலுக்கு வந்து, நோய்வாய்ப்பட்ட கணவருக்குப் பணிவிடைசெய்து கொண்டிருப்பதால் சிறிது நேரம் காத்திருக்கும்படி அவரிடம் கேட்டார். இது துறவிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மற்றும் அவர் அவளைப் பார்த்து, 'அபாண்டமான பெண்ணே, என்னைக் காத்திருக்க சொல்வதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்! உனக்கு என் சக்திகள் பற்றி தெரியாது.’ என்று கூறினார். அவருடைய மனதைப் படித்த அந்தப் பெண், ‘என்னை இவ்வளவு கோபமாகப் பார்க்காதீர்கள். உங்கள் பார்வையால் எரிக்கப்படும் காகம் அல்ல நான்.’ என்று கூறினார். துறவி அதிர்ச்சியடைந்து, இந்த சம்பவம் பற்றி எப்படி தெரியும் என்று கேட்டார். இல்லத்தரசி, தான் எந்த துறவறமும் செய்யவில்லை, ஆனால் பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் தனது கடமைகளை செய்ததாக கூறினார். அதன் பயனாக, அப்பெண்மணி அறிவொளி பெற்று இருந்தார், அதனால் அவருடைய மனதை அறிய முடிந்தது. அப்பெண்மணி மிதிலா நகரத்தில் வாழ்ந்த ஒரு நேர்மையான கசாப்புக் கடைக்காரனைச் சந்திக்கும்படி ஸன்யாஸியிடம் கூறி தர்மத்தைப் பற்றிய அவருடைய கேள்விகளுக்கு கசாப்புக் கடைக்காரர் பதிலளிப்பார் என்று கூறினார்.

சமூகத்தின் பார்வையில் தாழ்ந்தவராகக் கருதப்பட்ட நீதியுள்ள கசாப்புக் கடைக்காரரை சந்திக்க ஸன்யாஸி தனது ஆரம்பத் தயக்கத்தைத் தாண்டி மிதிலையை அடைந்தார். நீதியுள்ள கசாப்புக் கடைக்காரர் நமது கடந்த கால செயல்கள் மற்றும் திறன்களின் அடிப்படையில் நம் ஒவ்வொருவருக்கும் சொந்த தர்மம் (ஸ்வ-தர்மம்) உள்ளது என்பதை அவருக்கு விளக்கினார். நமது இச்சைகளையும், தனிப்பட்ட நலன்களையும் துறந்து, நமது இயற்கையான கடமையை நிறைவேற்றி, நம் வழியில் வரும் கணநேர இன்ப துன்பங்களைத் தாண்டி உயர்ந்தால், நாம் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தர்மத்தின் அடுத்த உயர் நிலையில் நுழைய முடியும். இவ்வாறே, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலமும், அவற்றிலிருந்து பின்வாங்காமல் இருப்பதன் மூலமும், ஆன்மா தனது தற்போதைய ஸ்தூல உணர்விலிருந்து தெய்வீக உணர்விற்கு படிப்படியாக பரிணமிக்கிறது. தனக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலம், அவற்றிலிருந்து விலகாமல், ஆன்மா அதன் தற்போதைய மொத்த உணர்விலிருந்து படிப்படியாக தெய்வீக உணர்வாக பரிணமிக்கிறது. கசாப்புக் கடைக்காரர் வழங்கிய விரிவுரை மகாபாரதத்தின் வியாத கீதை என்று அழைக்கப்படுகிறது.

அர்ஜுனனுக்கு இந்தச் செய்தி குறிப்பாகப் பொருந்தும், ஏனெனில் அவன் தன் தர்மத்தை வேதனை நிறைந்த மற்றும் துன்பம் மிக்கதாக கருதி அதை விட்டு ஓட விரும்பினார். இந்த வசனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தனது கடமையை சரியான உணர்வுடன் நிறைவேற்றுவதன் மூலம், அவர் பரமாத்மாவை வணங்கி, பூரணத்தை எளிதில் அடைய முடியும் என்று அறிவுறுத்துகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
18. மோக்ஷ ஸன்யாஸ யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency